ஞாயிறு, 21 ஜூன், 2020


ஜீவநாடி அருளாடல்கள் பகுதி 9


ஆலயப் பரிகாரங்கள் மட்டுமில்லாமல் ஒரு சில மூலிகை மர்மங்களும், அதைப் பயன்படுத்தும் விதமும்
உரைக்கப்பட்டு அந்த மூலிகையை
அணிவதற்குள் ஆயிரம் அதிசயத்தை ஏற்படுத்துகிறது.


ஒரு சிலருக்கு யந்திரங்களை
வைத்து பூஜை செய்யும் முறைகள் வருகிறது. இன்னும் சிலருக்கு
யாகங்கள் செய்யச் சொல்லப்படுகிறது. ஞானத்தில் தெளிந்த நிலை உடையவர்களுக்கு மந்திர
உபதேசமே ஜீவ நாடியில் வருகிறது.

அதை எப்படி உச்சரிப்பது எப்படி பிரயோகம் செய்வது என்பது கூட
ஒரு குரு, உடன் இருந்து கற்றுக் கொடுத்தால் எப்படி இருக்குமோ
அப்படி வருகிறது.

உபாசனை செய்யும் இரகசியங்கள், தேவதைகளோடு
உறையாடும் உயர்வான மார்க்கங்கள் உறுதியான வழிமுறைகள் சொல்லப்படுகின்றன.
இது யாருக்கு பிராப்தமோ அவர்களுக்கே உறைக்கப்படுகிறது.

இன்னும் பாமர மக்களுக்கு மிகச் சுலபமான வழியாக அவர்களது
ஏதேனும் மூன்று பிரச்சினைகளை ஒரு தாளில் எழுதி அவர்கள்
குலதெய்வத்தின் பெயரோடு கொடுத்துவிட, அதை நான் பூஜித்து அவர்கள் குல
தெய்வத்தோடு தொடர்பு கொண்டு  ஆசி  பெற்று ஜீவ நாடியை
இந்த பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு என சங்கல்பம் செய்து நாடியைப் பிரித்த உடனேயே
உறுதியான தீர்வும், அவர்கள் குலதெய்வம் என்ன
நினைக்கிறது, ஏதேனும் பூஜைகள் செய்ய வேண்டுமா அல்லது தேவை இல்லையா? என பல
விடைகள் கிடைத்து வடிவேல் முருகனின் ஆசியும் கிடைத்து
விடுகின்றன.

இது தான் எளிமையான வழிமுறையாகும்.

கேட்கின்ற கேள்விகள் தொடர்பான விடைகள் மட்டுமில்லாது, இன்னும் சில
கூடுதல் செய்திகளும், சித்தர்கள் மூலமும், முருகப்பெருமான் மூலமும் உணர்த்தப்படும்.

எனவே ஜீவ நாடி என்பது ஒரு நம்ப முடியாத பேரதிசயம்
என்றால் மிகை இல்லை.


கட்டுரையாக்கம்: ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள், ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம், அந்தியூர்.

2 கருத்துகள்:

  1. உபாசனை விளக்கங்களை நாடியில் எனக்கும் எங்கள் நண்பர்களுக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான மார்க்கங்கள் வந்துள்ளது.ஸ்ரீ சக்கரம் வழிபாடு குருவே கற்றுக் கொடுத்து நாடியில் தொடர்ந்து செய்து வரும்படியும் தெய்வ தேவதைகள் தொடர்பு கொள்ளும் முறையும் நாடியில் முருகனே குருவாக வந்து ஆசி அருளியதும் நான் அனுபவித்து வருவதும் கண்கண்ட உண்மை.அனுபவித்தவர்க்கே கற்கண்டாய் இனிக்கும்.இதனை விவரிக்க வார்த்தைகள் இல்லை...ஆன்மீகம் அமானூஷ்யம் கலைகளை அனைத்தும் நான் என் குருவிடம் இருந்து பெற்று வரும் அனுபவ உண்மை.அவரவர் கர்ம வினைப்படியே வழிபாடு முறைகளும் பரிகார முறைகளும் தெய்வ உபாசனை தொடர்பும் நாடியில் வருவது கண்கூடு..
    ஒருவருக்கு யாக முறையும் ஒருவருக்கு மூலிகை இரகசியமும் ஒருவருக்கு மனதார வழிபாடே வருவதும் எங்கள் அருளாளர்கள் அனுபவித்து வரும் உண்மை..இந்த கலியுகத்தில் தீட்சை க்காக பல ஆயிரங்கள் லட்சம் பெற்று முறையில்லாத வழிகளும் இருக்கும் இந்த காலத்தில் எங்கள் குருநாதர் எங்களுக்கு தீட்சை தந்ததில் எந்த ஒரு தடசணையும் எங்களிடம் பெறவில்லை என்பதே உண்மை.முருகன் உத்தரவுப்படி பாரபட்சம் பார்க்காமல் இறை ஆணைப்படி செயல்பட்டு பணம் பெறும் குறிக்கோள் இல்லாமல் பொதுநலத்தோடு குரு அவர்கள் செயல்பட்டு வருவது நாங்கள் இந்த கலியுகத்தில் பெற்ற இறைவன் அருள்...திருவருள் இருந்தாலும் குரு அருள் இருந்தால் மட்டுமே அனைத்தும் சித்தியாகும் என்பதே உண்மை ...
    குரு மட்டும் நினைத்து விட்டால் போதும் நம்மை கரை சேர்க்க எல்லாம் தானாக படிப்படியாக நடந்தேறும்‌இது என் அனுபவ உண்மை.அதற்கு நம்மிடம் தேவை குருபக்தி சரணாகதி..குருவருள் கிட்டினால் திருவருள் கிட்டும் என்ற சூட்சும இரகசியம் இதுதான்.
    ஓம் ஸ்ரீ ஜெகதீஸ்வராய நமஹ...

    பதிலளிநீக்கு