சனி, 2 ஜனவரி, 2016

3ம் ஆண்டில் கௌமாரபயணம்

ஜனவரி 2016 முதல் நமது கௌமாரபயணம் முத்தான மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த மூன்றாம் ஆண்டில் மகத்துவம் பொருந்திய இறையருள் செய்திகளை வெளியிடும் இந்த கௌமாரபயணம் உண்மையிலேயே முற்றிலும் மாறுபட்ட ஆன்மீக பயணம்  என்று பல ஆன்மீக அருளாளர்கள், குரு மஹா சந்நிதானங்கள், பல கௌமார பயண வாசகர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்கள்.
உலகம் முழுவதும் இருந்து இதுவரை சுமார் 6 லட்சம் வாசகர்கள்  நமது கௌமாரபயணத்தைப் படித்துள்ளார்கள் என்பது இந்த நேரத்தில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும்.
கருத்துக்கள்:
சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களின் வாழ்த்து
கஜ பூஜை சுவாமிகள் பற்றிய கவிதை மிக நன்று. சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் கட்டுரை மிக நன்றாக உள்ளது. பழனி பட்டணம் சுவாமிகள் குரு பூசை செய்தி நன்றாக உள்ளது.உங்கள் ஆன்மீக சேவை தொடர வாழ்த்துக்கள்.

தென்சேரிமலை ஆதீனம் தவத்திரு முத்து சிவராமசாமி அடிகளார் அவர்களின் வாழ்த்து
முருகப்பெருமானின் திருவிளையாடல்களை உலகம் முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கில் அரிய சேவைகள் செய்து வரும் இந்த தளமும், ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களும் நீடுழி வாழ்ந்து இது போல் இன்னும் பல சேவைகள் செய்ய வாழ்த்துகின்றேன்.
ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் வருகின்ற எழுத்துக்கள் அப்படியே வார்த்தைக்கு வார்த்தை  பலிக்கின்றது.---உதய சங்கர், மும்பை

ஒரு பத்து நாட்களுக்கு முன்னர்தான் இந்த பிளாக்கை பார்த்தேன், அனைத்து பதிவுகளையும் படித்தேன் மிக நல்ல தகவல்கள்---அஷோக் அவர்கள்

அனைத்தும் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தியின் திருவிளையாடல்கள் ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!---சம்பூர்ணம், கேரளா

தினசரி கௌமாரபயணம் மிக ஆர்வத்துடன் படித்து வருகின்றேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது---கந்தன்ஸ்ரீ அவர்கள்

அருமையான தவல்கள் அற்புதம்  கண்டேன்...வியந்தேன்.. பதிவிற்கு நன்றி         ---முத்தமிழன் அவர்கள்

இது இறையருள் பெற்றுத்தரும் பயணம் நன்றிகள் பல---கவிதா அவர்கள்

இணையதளம் மிக அருமை..எல்லாம் முருகன் அருள்----சங்கர் அவர்கள்

மிக நல்ல செய்தி இந்த சேவை தொடரட்டும்---சித்ரா சிட் பண்ட்ஸ் அவர்கள்

எனது 30 ஆண்டுகால அனுபவத்தில் நாடி மிக மிக மிக உண்மை---சூரிய மூர்த்தி அவர்கள் ஈரோடு

அற்புதமான தகவல்கள்---சுஜாஜெய்கோபி அவர்கள்

பெரும் தொண்டரோடு கூட்டுக்கண்டீர் வாழிய நீவிர் பல்லாண்டு---திரு.கார்த்திகேயன் அவர்கள்

மேலும் தொடர்ந்து படிக்க ஆவலாய் உள்ளேன்--- வள்ளி அவர்கள்

இந்த பதிப்புகளைப் படிப்பது பெரும் பாக்கியம்---சுரேஷ் அவர்கள்

மிகவும் அழகான திருவிளையாடல்கள், இதில் சில பகுதிகளை அகத்தியர்வனம் பிளாக்கில் ஆங்கிலத்தில் வெளியிடுகிறேன் ----சண்முகம் ஆவுடையப்பன் அவர்கள், மலேசியா

 நாடியின் பதிவுகள் மிகவும் அருமை சித்தர்கள் ஆட்சியை எதிர்பார்க்கிறேன் ---அருண்முருகன் அவர்கள்

எனது ஆன்மீகத் தேடலில் மற்றுமொரு முத்து கிடைத்த சந்தோஷம்---வள்ளி யு.எஸ்.ஏ

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்---திண்டுக்கல் தனபாலன் அவர்கள்

ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடிக்கு ஈடு இணையே இல்லை. எனது மிகுந்த மரியாதைக்குரிய ஆன்மீக குரு ஜெகதீஸ்வரன் ஐயா அவர்கள் செய்து வரும் இந்த சேவைக்கு மிக மிக நன்றி---ஆறுமுகம் சந்தன ராஜீ அவர்கள்

அடியேன் தங்களிடம் ஜீவ நாடி கேட்டு வருகின்றேன். அதன் அனுபனக்களை வார்த்தைகளால் கூற இயலாது. முருகனே வழிகாட்டிக் கொண்டுள்ளார். தாங்கள் அடியேனுக்கு சொன்ன அனைத்தும் நடக்கிறது---ரவிகுமார் உடுமலைப்பேட்டை

அய்யா தங்களிடம் ஜீவ நாடி கேட்டுள்ளேன். அப்போது அடைந்த ஆனந்தத்தை இந்த பதிவுகளப் படிக்கும்போது உணர்கின்றேன்.

இது போல் இன்னும் ஆயிரக்கணக்கான கருத்துக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. உங்கள் கருத்துக்களை kaumarappayanam@gmail.com எனும் மின்னஞ்சலில் அனுப்பலாம்.
எனது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களுக்கு இந்த நேரத்தில் இந்த கௌமார பயணம் இணையதளம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் வழங்கிய அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக