திங்கள், 18 ஜனவரி, 2016

தேரோட்டம் நடத்தவும் தடை வரலாம் சிரவையாதீனம் உருக்கப் பேச்சு

ஆறுபடை முருகன்
கோவை அன்னூரில் மன்னீஸ்வரர் கோவிலில் நடந்த ஆறுபடை வீடுகளுக்கு முருக பக்தர்கள் புறப்பட்டுச் செல்லுதல் மற்றும் சண்முகார்ச்சனை விழாவில் சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்கள்.
                                                                         சண்முகர்
அந்த விழாவில் பேசுகையில் மரபு சார்ந்த விளையாட்டுகளுக்குத் தடை வருவதைப் பார்த்தால் புழுதி ஏற்பட்டு சுற்ருச் சூழல் மாசுபடுகிறது என்று கூறி தேரோட்டத்திற்கு கூட தடை வரலாம் அதேபோல் சர்க்கரைப் பொங்கல் அதிகமாகச் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்று சொல்லி கோவில்களில் சக்கரைப் பொங்கல் வழங்கவும் தடை விதிக்கப்படலாம் என்றும் மிகுந்த வேதனை கலந்த உருக்கத்துடன் சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள் பேசினார்கள்.
                                        
                                                              தேரோட்டம்
                                           
                                                        சக்கரைப் பொங்கல்
அதேபோல் நமது வழிபாடுகளின் நோக்கங்களை மறந்து நாளடைவில் சடங்குகளை மட்டும் கடைபிடிப்பது போல் ஆகிவிடக்கூடாது என்றும்  நமது குழந்தைகளுக்கு ஆன்மீகம் கற்பிக்க வேண்டும் என்றும் சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள் பேசினார்கள்.
           படம்: குழந்தைகளுக்கு ஆன்மீகம் கற்பித்தல் (எழுத்தாணிப்பால் விழா)
நன்றி: கோவை தமிழ் பத்திரிகைச் செய்தி
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!
என்றும் எம் ஞானதேசிகர் பணியில் 
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக