வியாழன், 28 ஜனவரி, 2016

ஜீவ நாடியில் வந்த ஸ்ரீவித்யா சோடச தீப பூஜை

ஆதிசங்கரரால் முறைப்படுத்தப்பட்டது ஆறு சமயங்கள். சண்மதங்கள் என்றும் அதைச் சொல்வார்கள். கணபதி வழிபாடு காணாபத்யம், முருக வழிபாடு கௌமாரம், சிவன் வழிபாடு சைவம், அம்பிகை வழிபாடு சாக்தம், சூரிய வழிபாடு சௌரம், விஷ்னு வழிபாடு வைணவம் எனப்படுகின்றது. நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் கௌமார சமய குரு பரம்பரையில் கௌமார வழிபாடு கடைபிடிக்கப்படுகின்றது. கௌமார நெறியில் அறு சமய வழிபாடும் நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் நிகழ்த்தப்படுகின்றது. அந்த வகையில் தைப்பூசத்தின் முன்தினம் தீர்த்த நீராட்டு நாளில் ஸ்ரீவித்தை மார்க்கத்தில் ஆச்சாரிய அபிடேகம் பெற்ற சாக்த உபாசகர் ஸ்ரீகுகானந்த நாத சுவாமிகள்(ஆதவா) அவர்கள் சோடச தீபம் ஏற்றியும், அகத்தியர் திருமைந்தன் அவர்கள் வேல் தீபம், சூல தீபம் ஏற்றியும் கூட்டு வழிபாடு நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் தலைமையில் நிகழ்த்தப்பட்டது. .இந்த தீபங்கள் செய்யும் முறைகளை  நமது ஞானஸ்கந்தர் ஜீவ நாடி மூலம் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் உபதேசித்து இருந்தார்கள். நல்ல முறையில் தீபங்கள் செய்யப்பட்டு முதல் தீபம் நமது ஞானஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் தலைமையில் ஏற்றப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டது. மதுரை இறையருள் மன்றம் திருவாளர் பரமசிவம் அவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள். சுமார் 500 பக்தர்கள் வழிபாடு செய்து அருள்பெற்றார்கள். அந்த நிகழ்ச்சிகளின் சில காட்சிகள்.
சாக்த உபாசகர், இறையருள் மன்றத்தினருடன் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் 
வேல், சூல வடிவில் தீப வழிபாடு 
                  சாக்த உபாசகருடன் உரையாடும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள்
சோடச தீபம் 
தைப்பூச ஊர்வலத்தில் பாலமுருகப்பெருமான் 
வள்ளி தெய்வானையுடன் ஸ்ரீகல்யாண சுப்ரமண்யர்
இந்த தீப வழிபாடு திதி நித்யா தேவிகள் புடை சூழ பாலாம்பிகை இராஜ மாதங்கி, வாராஹியுடன் லலிதா திரிபுர சுந்தரியின் அருளை ஒருசேரப் பெற்றுத்தந்தது எனும் செய்தி நமது ஜீவ நாடியில் வந்து அனைவரையும் ஆனந்தம் அடையச் செய்தது.

ஓம்ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக