செவ்வாய், 22 டிசம்பர், 2015

29.12.2015 அன்று சிரவை ஆதீன முதல்வர் குரு பூஜை விழா

                                
சிரவை ஆதீனக் குரு முதல்வர் திருப்பெருந்திரு இராமானந்த சுவாமிகள் அவர்களின் 59 வது ஆண்டு நிறைவுக் குருபூசை விழா மார்கழி மாதம் 13ம் நாள் ஆயில்யம் அன்று 29.12.2015 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் கௌமார மடாலய சமாதி வளாகத்தில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் நூல் வெளியீட்டுடன் எம் ஞான தேசிகர் சிரவை ஆதீனம் முனைவர் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்களால் சிறப்பாக நடத்தப்பட உள்ளது. இந்த விழாவில் பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார், இளையபட்டம் தவத்திரு மருதாசல அடிகளார், பழனிஆதீனம் தவத்திரு.சாது சண்முக அடிகளார்,தென்சேரி மலை ஆதீனம் தவத்திரு முத்து சிவராமசாமி அடிகளார் தாராபுரம் தவத்திரு சிவாச்சல அடிகளார் போன்ற பெரியோர்கள் கலந்து கொள்கின்றார்கள். 
இந்த குருபூஜை விழாவில் வெளியிடப்படும் நூல்களின் விபரங்கள்

  1. அருணகிரிநாதரின் திருப்புகழ்த்திரட்டு
  2. சுப்பிரமணிய சப்தசதி ஹோம விதானம் (தமிழில்)
  3. ஒளவையாரின் நீதி நூல்கள் (ஆங்கிலத்தில்)
 நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
என்றென்றும் அன்புடன்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக