வியாழன், 24 டிசம்பர், 2015

ஜீவ நாடியில் வந்த மகேஸ்வர பூஜை!

ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் பல பேருக்கு மகேஸ்வர பூஜை செய்யச் சொல்லி வருகிறது. அதை எப்படி எங்கு செய்வது என்று பலர் கேட்கிறார்கள். அவர்களுக்காக எனது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் ஆசியாலும் அவர் வழிகாட்டுதலாலும் இந்த பதிவு. திருவண்ணாமலையில் ஸ்ரீ தயவு சித்த ஆஸ்ரமத்தில் ஸ்ரீ சரவணபவா சுவாமிகள் மூலம் செய்யப்படும் மகேஸ்வர பூஜை குருவையே தரிசிக்க வைக்கும் என்றால் மிகை இல்லை. சன்னியாசிகளை அமரவைத்து அன்னதானம் செய்து மகேஸ்வர காலமான 12 முதல் மணிக்குள் சிவ பெருமானுக்கு எப்படி பூஜை செய்யப்படுகிறதோ அது போலவே சிவனடியார்களுக்குச் செய்யப்படுகிறது. அன்னதானத்தின் மகிமையை அறியாதார் யாரும் இல்லை.ஆனால் சிவனடியார்களை அமர வைத்து அவர்களை சிவனாகவே பாவித்து செய்யப்படும் அன்னதானத்தின் மகிமையை அனுபவித்து பார்த்தல்தான் தெரியும். எந்த ஒரு லாப நோக்கமின்றி முற்றிலும் இறை பணியாகவே இந்த பூஜை செய்யப்படுகிறது.



குறிப்பு: பட்த்தில் நீங்கள் காண்பது 27.5.2014 அன்று ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் நடந்த மகேஸ்வர பூஜை, அந்த அற்புதமான பூஜையைச் செய்பவர் ஸ்ரீ சரவணபவா சுவாமிகள் அவர்களாவார்.

இது எல்லாப்பரிகாரங்களையும் விட மேலான பரிகாரம் என்று  நமது ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் குருநாதர் திருவண்ணாமலை ஸ்ரீ வகாப் ஜோதி அக்பர் சுவாமிகள் மீனாட்சி நாடி மூலம் சொல்லியுள்ளார்கள். அத்துடன்  நமது ஸ்ரீ ஞான ஸ்கந்தர் ஜீவ நாடி அருள் வாக்கிலும் அடிக்கடி மகேஸ்வர பூஜையைப் பற்றி வருகிறது. எந்த காரியம் தடையாக இருந்தாலும்எப்பேர்பட்ட கர்ம வினையாக இருந்தாலும் இந்த மகேஸ்வர பூஜை நிவர்த்தி செய்து விடுவதை நாங்கள் அனுபவத்தில் பார்த்து வருகிறோம். கர்ம வினை தீர அன்னதானமே ஒரே வழி. யாருக்கு பிராப்தம் இருக்குமோ அவர்களே இதைப் படிக்க முடியும்பூஜையும் செய்ய முடியும்.
மகேஸ்வர பூஜை செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

ஸ்ரீ சரவணபவா சுவாமிகள்,
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம்,
கிரிவல பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் அருகில்,
திருவண்ணாமலை,
செல்: (0)9944800220
(இந்த எண்ணில் தொடர்பு கொண்டு  மகேஸ்வர பூஜை செய்ய பதிவு செய்து கொள்ளலாம்.)


                           
  ஓம் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் !!!

2 கருத்துகள்: