திங்கள், 14 டிசம்பர், 2015

கோவை கௌமார மடாலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா

கோவை கௌமார மடாலயத்தில் உள்ள பாண்டுரங்கர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா 21.12.2015 திங்கட்கிழமை அன்று அதிகாலை 4:30 மணிமுதல் சொர்க்க வாசல் திறப்போடு நடக்க இருக்கின்றது.

அதே நாளில் காலை 11 மணிக்கு பேரூர் தெற்கு நந்தவனம் சுந்தர சுவாமிகள் அவர்களின் குரு பூசை கௌமார மடாலய சமாதி வளாகத்தில் நடைபெற உள்ளது.

25.12.2015 வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு ஆருத்ரா தரிசனம் அம்பலவானர் திருமஞ்சனம் பேரொளி வழிபாடு  பூசை நடைபெற உள்ளது.

நமது கௌமார பயணம் வாசகர்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு குருவருளையும் திருவருளையும் பெற்று வாழ்வில் வளம் பல பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
                                                                   அழைப்பிதழ்
 நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!

என்றும் என் ஞானதேசிகர் சேவையில்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக