செவ்வாய், 29 டிசம்பர், 2015

ஜீவ நாடி கலையரசு எழுதிய திம்ப சக்கரம் நூல்


ஜோதிடத்தின் ஆனி வேரென ஆன்றோர்கள் அறிவிப்பதும், மூல நூல்கள் பாடல்களில் மறைப்பொருளாய் எல்லோர்க்கும் எளிதில் புரியா வண்ணம் தெரிவிப்பதும், ஜாதகப் பலாபலன்கள் பகத்தறிவது எப்படி எனும் சூட்சமத்தின் சூத்திரமும், கர்ம கணக்கை கண்டறியும் சாத்திரமும் ஒன்றேயாகும். மக்கள் திறமையான ஜோதிடர்களிடம் சென்று இராசி, நவாம்சம், தசாபுத்தி, கோட்சாரம் என ஏனைய சூட்சுமங்களையும் அலசி ஆராய்ந்தும் கூட, சந்திப் பிழைகளை சரி செய்து பார்த்தாலும் கூட புரியாத புதிராய், விடை தெரியாத விடுகதையாய் பலநேரங்களில் சில ஜாதகப் பலன்கள் மாறுபடுகிறது. ஜோதிடர்களின் கணிப்பும், கருத்தும் வேறுபடுகிறது. இக்குறையை முற்றிலும் நீக்குவதற்கும் ஜோதிடத்தின் சூட்சுமத்தை எளிமையாய் யாவரும் கண்டறிவதற்கும், ஜோதிடர்களின் கணிப்பு முரண்பாடில்லாமல் மிக துல்லியமாய பலன்களுடன், பரிகாரங்கள் கூறி முன் ஜென்ம கர்ம வினைப்பயனை களைந்து பாரோர் இன்புற்று வாழ்வதற்கும் படைக்கப்பட்ட அருமையான நூல் திம்பசக்கரமாகும். 
ஆன்மிகமாயினும், ஜோதிடமாயினும் தீவிர ஆராய்ச்சி மட்டுமே அனுபவத்தை தரும். ஏட்டு படிப்பு பாதையை கூறும் ஆனால் அனுபவம் ஒன்றே பயணத்திற்கு உறுதுணையாய் உதவும். திரு P.D.ஜெகதீஸ்வரன் அவர்கள் ஒரு தகவலை மக்களுக்கு தருமுன் பலமுறை அதை பரிசோதித்து பலன்களின் ஆழத்தை அறிந்து செய்லபாட்டின் துல்லியத்தை ஆராய்ந்து உறுதி செய்திட்ட பின்னரே இறுதியில் அறுதியிட்டு விதிமுறைகளுடன், பரிகாரம் என மக்களுக்கு பகுத்தளிப்பார். கர்மபலனை, விதிப்பயனை, முன்ஜென்ம தீய வினையால் ஏற்படும் நவகிரகங்களின் கோபத்தின் தாக்கத்தை மாற்றும் சக்தி சிலரது ஸ்பரிசம், பார்வை, மற்றும் நிழலுக்கு கூட உண்டு. அப்படி ஒரு ஆன்மிக அருட்பெரும் ஞான சக்தியை பெற்றவர் தான் "ஜீவநாடி கலையரசு" திரு றி.ஞி.ஜெகதீஸ்வரன். இவரது நாவில் குடி கொண்டுள்ளது ஞானக் குழந்தையான ஆறாதார தத்துவ சிவனுக்கு சிவனான ஓங்காரமான பாலசுப்பிரமணியர் பெருமானாகும். ஆகவே தான் எத்தனை பெரிய தீர்க்க முடியாத கர்ம வினைகளைக் கூட சில மாதங்களில் போக்கும் வல்லமையை தனது உபாசனை மற்றும் பல துறை குருக்களின் உபதேசம் மூலம் தன் வசமாக்கி தூய்மையின் சொரூபமாய், ஞானத்தின் ஜோதியை ஒருங்கே பெற்றுள்ளார். இவர் இயற்றிய நூலான "திம்பசக்கரம்" ஜோதிடர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். 
திம்ப சக்கரம் எனும் இந்நூல் பழங்கால ஜாதகாபரணம், ஹோரா ரத்னம் எனும் மூல நூல்களில் மறைப்பொருளாய் திரு துண்டி இராஜா மற்றும் பலபத்ரர் என்போரால் பல ஸ்லோகங்களில் மறைக்கப்பட்ட சூத்திரத்தின் ஆழமான கருத்துக்கள் அடங்கிய இரகசியங்கள் முதன்முறையாய் தமிழில் வெளிவந்துள்ளது. இந்நூலில் உள்ளவாறு பிறப்பின் ஆதாரமான இராசி சக்கரத்தை திம்ப சக்கரமாய் மாற்றி அமைத்து ஆராய்ந்தால் எல்லா விதமான கேள்விகளுக்கும் விடைகள் தெள்ளத் தெளிவாய் விளங்கும். பலன் கேட்டு வரும் மக்களின் மனமும் தீர்வு கிடைத்ததென குளிரும். இருளில் வழி தெரியாது விழித்தோர்க்கு பலன்களுடன், பரிகாரங்களும் ஒளியாய் ஜொளிக்க வாழ்க்கை பயணம் இன்புற்று செழிக்கும். 
மனித உடலின் பாகங்களான அங்க உறுப்புக்களை நெற்றி முதல் பாதம் வரை 12 இராசிகளாய் பிரித்து அமைத்து, 27 நட்சத்திரங்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஒவ்வொரு உறுப்புக்கும் என வகுத்து வரையறுத்து அவரவர் ஜாதகத்தில் பிறப்பின் இராசி கட்டத்தில் சூரியன் நின்ற நட்சத்திரத்தை முதலெனக் கொண்டு இலக்கினத்தை மாற்றாது கிரகங்களை மட்டும் உறுப்பு நட்சத்திரத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்து சந்திரன் நின்ற இராசியை மைய புள்ளியாய்க் கொண்டு பலன் உரைப்பதே "திம்ப சக்கரமாகும்". பொதுவாக ஜாதகத்தில் பித்ரு தோஷம் மிக கொடுமையான தீர்க முடியாத ஒரு தோஷமாகும். இது தலைமுறை தலைமுறையாய் பல ஜென்மங்களுக்கும் தொடாந்து வரும் முன்னோர்களின் சாபத்தால் ஏற்படுவதாகும். இத்தகைய பித்ருதோஷம் உள்ள ஜாதகங்களுக்கு ஜோதிடர்கள் பலன் உரைத்தால் பலன்கள் பலிப்பதில்லை. காரணம் பித்ரு தோஷம் தீர்க்கபடாமல் சரியான பலன் உரைக்க முடிவதில்லை. அப்படிப்பட்ட ஜாதகத்தைக் கூட திம்ப சக்கரம் அமைத்து பார்த்தால் கர்மாவின் காரணங்களும், வினையின் வீரியமும், விரிவாய் புரியும் பலன்களும் தெள்ளத் தெளிவாய் தெரியும். பரிகாரம் கூறினால் உடனே தோஷம் தீரும். 
திம்பசக்கரம் இராசி சக்கரத்தின் அடிப்படையை தழுவியதே பலன் கூறுவது முதல் தசா புக்தி கண்டறியும் விதம், கோட்சாரம் பரிகாரங்கள் என அனைத்துமே இதிலும் உண்டு. ஆனால் நட்சத்திரங்கள் உறுப்புக்கள் மூலம் இராசிகளில் கிரகங்கள் மாறுவதால் சில மர்மங்கள் நிர் மூலமாகி வெட்ட வெளிச்சமாகிறது. இது ஒரு மறைக்கப்பட்ட பொக்கிஷம் இதை அக்காலத்தில் சில காரணத்தால் வெளியிடாது வைத்திருத்தனர். 
திம்ப சக்கரம் மூலம் எல்லா விதமான பலன்களும், சில நொடிகளில் கண்டறியலாம். திம்பசக்கரம் அமைக்க ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் ஜாதகத்தில் சூரியன் நின்ற நட்சத்திர அடிப்படையில் உறுப்புகளின் நட்சத்திர எண்ணிக்கையை அறிய திம்ப சக்கரம் உடனடி அட்டவணையை (பக்கம் 97) பயன்படுத்தி பயன் பெறலாம். சிலர் நாள்பட்ட பிணியில் அவதியுறுவர். மருத்துவர்கள் கண்டறிய முடியா நோய்களைக் கூட திம்ப சக்கரம் காட்டிக் கொடுத்து விடும். காரணம் திம்ப சக்கரத்தின் அச்சாணியே உறுப்புக்கள் உள்ளடக்கிய கிரகங்களின் நட்சத்திர அமர்வு தான். எனவே எந்த உறுப்பில் பிரச்சனை என்பது சில நொடிகளில் கண்டறிந்து பலன் உரைத்தால் விஞ்ஞானம் கூட மெய்ஞ்ஞானம் முன் அதிசயக்கும். பலன் பெற்றோர் பிணி தீர அவர் மனம் ஜோதிடத் தலைமுறைகளை தழைக்கச் செய்யும். 
திம்ப சக்கரம் மூலம் கல்வி நிலையை ஆராய்ந்து ஒருவருக்கு பிற்காலத்தில் வரும் தசாபுத்தி நிலைகளுக்கு ஏற்ப ஆலோசனை வழங்கி எந்தத் துறையில் ஒருவர் பொருளாதரா வகையில் சிறப்புற முடியும் என்பதை தெளிவாய் கூற முடியும். இக்காலத்தில் பலரும் ஒரே கல்வியை கற்றாலும் சிலரால் மட்டுமே பொருளாதார நிலையை உயர்த்தும் உத்யோகத்தை கல்வி மூலம் பெற முடிகிறது. எந்தக் கல்வியை கற்றாலும் பணம் மட்டுமே வாழ்க்கையை மேம்படுத்த உதவும் என்பதால் ஒருவருக்கு சரியான கல்வியை திம்ப சக்கரம் மூலம் கூறி அடுத்த தலைமுறையை தலை நிமிரச் செய்ய முடியும். நல்ல கல்வியை கற்றும், சிறந்த பணியை பெற்றும், கைநிறைய பணம் சம்பாதித்தும், நிறைந்த ஒழுக்கத்துடன் உண்மையாய் வாழ்ந்து வந்தாலும் கூட சில தோஷங்கள், சாபங்கள் சரியான பரிகாரங்கள் மூலம் நீக்கப்படாததால் முன்னர் செய்த வினைப்பயன் இன்னும் காரணம் புரியாமல், தொடரும் காரியத்தால் பலரது திருமணம் நாற்பதிலும் நர்த்தனமாட காண்கிறோம். இந்நிலையை மாற்ற திம்ப சக்கரம் நூலில் கூறப்பட்டுள்ள பரிகாரங்கள் மூலம் 100% பரிபூர்ண மனதுடன் செய்தால் தோஷங்கள், சாபங்கள் தீர்க்கப்பட்டு, நீக்கப்பட்டு திருமணம் உடனடியாக கூடுவது திண்ணம். 
திம்ப சக்கரம் ஒரு முழுமையான பலன் உரைக்க உதவும் அருமையான நூல். இதில் 12 உறுப்புகளில் கிரகங்கள் நிற்பதால் ஏற்படும் பலன்களை ஜீவநாடி கலையரசு திரு. றி.ஞி. ஜெகதீஸ்வரன் விளக்கியுள்ளார். ஜோதிடர்கள் ஒருமுறைக்கு பலமுறை படித்திட துல்லிய பலன்களை உடனடியாக உரைத்து கைராசியான ஜோதிடர் எனும் நல்ல பெயரை நிச்சயம் பெறலாம். அது மட்டுமல்லாது இதில் ஏராளமான தகவல்கள் உள்ளன. அவற்றை முழுமையாய் படிப்போர் விழிகளுக்கு கிரகங்களின் செயல்பாடுகள் தெள்ளத் தெளிவாகும்.இராசி திம்ப சக்கரம், திம்ப சக்கரம் தசாபுத்தி பலன்கள், கோட்சார சூட்சும திம்ப சக்கரம், திம்ப சக்கரத்தின் மூலம் புத்திர தோஷம் கண்டறிந்து பலன் உரைக்கும் முறைகள் என அத்தனை வகையிலும், ஒவ்வொன்றுக்கும் மிக துல்லிய பலனை காண படைக்கப்பட்ட மாபெரும் நூல்தான் "திம்ப சக்கரமாகும்". இந்நூலில் உள்ள உதாரண ஜாதகங்கள் மூலம் அளிக்கப்பட்ட விளக்கங்களை ஜோதிடர்கள் தவறாது ஆராய்ச்சி செய்தல் அவசியமாகும். ஏனெனில் அவை அனைத்தும் திம்ப சக்கரத்தின் துல்லியத்தை பறைசாற்றும் விடிவெள்ளியாகும். 
"திம்ப சக்கரம்" நூலின் தனித்துவமே பலன்களுடன் கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்கள் தான். இனிப்பை சுவைக்காது பஞ்சாமிர்த புகழைப் பாடக் கூடாது. அது போல ஜீவாநாடி கலையரசின் திம்ப சக்கர பலன்கள் மட்டுமல்ல அவரது அனுபவம் மட்--டுமே தரப்பட்டுள்ள ஆலயம் ஏனையே பரிகாரங்கள் என அனைத்திலும் தனிப்பட்ட முறையில் அவரே தொடர்புற்று உண்மையை மட்டுமே உலகோர் பயன்பட வழங்கியுள்ளார். இதில் குறிப்பாக பதினெட்டு சித்தர்களின் அதிசயங்கள், சதுரகிரி, பழநி, திருவண்ணாமலை பாதயாத்திரை, பௌர்ணமி விரதங்கள், முடிகாணிக்கை தத்துவங்கள், செல்வம் கொழிக்கும் சொர்ண ஆகர்ஷண பைரவர் ஸ்துதி, ஆன்மிககுறிப்புகள், முன்னோர் வகுத்த நெறி முறைகளின் காரண காரியங்கள், தோத்திர பாராயண பலன்கள் ஆலய கும்பாபிஷேக வகைகள், கோ பூஜை யாகம், கோமாதா மகிமை, ஹோமங்களின் பலன்கள், ஜென்ம நட்சத்திர விருட்ச பரிகாரங்கள், திருமண தடை, தோஷ நிவர்த்தி பரிகாரங்கள், பல நாட்டில் உள்ள திருமண சடங்குகள், சத்ருசம்ஹார வேல் பூஜை, அன்னதான மகிமை, மகேஷ்வர பூஜையின் மகத்துவம், இரத்ததானப் பலன்கள், காவடி எடுக்கும் காரணம், பரிகாரம், கண்ணாடி வசிகர பயிற்சி, அருவி, கடல் நீராடலின் காரண காரியங்கள், இரகசியங்கள் என இவை அனைத்தும் ஜோதிடர்கள் மட்டுமல்ல பாமரர்கள் கூட தெரிந்துக் கொள்ள வேண்டிய இரகசியங்களை பரிகாரங்களாக விளக்கி அருமையாய் தந்துள்ளார் "ஸ்ரீஸ்கந்த உபாசகர் "ஜீவநாடி கலையரசு" திரு.ஜெகதீஸ்வரன் அவர்கள். 
திம்ப சக்கர நூலை ஜோதிடர்கள் வாங்கி படிக்கும் பாக்கியம் பெற்றால் தங்கள் திறமைக்கு மணிமகுடமாய் சிகரத்தின் ஜீவஒளியாய் நிச்சயம் திகழ முடியும். இறைவன் வகுத்து அறிந்த இரகசியமான விதியை துல்லியமாய் உரைக்கும் உத்திரவாதத்தை திம்பசக்கரம் தருகிறது. எனவே இந்நூலை ஜோதிடர்கள் உடனே வாங்கிப் படித்து பலன் பெற்று இன்புறவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு

http://www.apsaraepublications.com/review_2.php

1 கருத்து: