வெள்ளி, 11 டிசம்பர், 2015

அகத்தியர் வடிவில் காட்சி தரும் மலை

ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்கள் ஞானஸ்கந்தர் ஜீவ நாடியை வாசிக்கும் போது அகத்தியர் வாக்கு வந்தது அதைக் கேட்டுக்கொண்டிருந்த அகத்தியர் திருமகன் எனும் ஆன்மீகப் பெரியவரிடம் இந்த ஞானஸ்கந்தாஸ்ரமத்தின் பின்புறம் உள்ள மலையை உற்றுப் பார் உனக்கு ஒரு காட்சி தருவேன் என அகத்தியர் உரைத்தார். அவரும் நீண்ட நேரம் உற்ரு உற்ருப் பார்த்தும் எந்த வித காட்சியும் கிட்டாமல் வழ்க்கம்போல் அகத்தியர் ஐயா ஏமாற்றிவிட்டார் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். இதை அருகில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்த மதுரை இறையருள் மன்றம் பரம் சிவம் அவர்கள் இந்த மலையை தனது அலை பேசியில் புகைப்படம் எடுத்து தனது வீட்டில் அந்த படத்தையே அகத்தியரை தியானித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். உடனே அந்த மலையே அகத்தியர் வடிவில் இருப்பதை உணர்ந்து மெய் சிலிர்த்து ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்களிடமும் அகத்தியர் திருமகன் எனும் ஆன்மீகப் பெரியவரிடம் இதைத் தெரிவித்து மகிழ்ந்தார். சித்தர்கள் வாக்கு என்றுமே பொய்த்ததில்லை என்றும் நாம் புரிந்து கொள்வதில்தான் பிழை இருக்கின்றது என்றும் பின்பு ஒருமுறை அந்த அகத்தியரே ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் உரைத்தார். நமது கௌமாரப்பயணம் வாசகர்களுக்காக அந்த மலை வடிவில் உள்ள அகத்தியர் படத்தை இங்கு வெளியிடுகின்றோம்.
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரம் பின்பு றம் அகத்தியர் வடிவில் மலை
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!

2 கருத்துகள்: