சனி, 12 டிசம்பர், 2015

சிரவை ஆதீனம் அவர்கள் அந்தியூர் வருகை

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 25.10.2015 ஞாயிற்றுக் கிழைமை அன்று காலை 8.30 மணிக்கு அங்காளம்மன் ஆலய குடமுழுக்கு விழா இனிதே நடைபெற்றது.சிரவை ஆதினம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் வருகை தந்து குடமுழுக்கை திரு நெறிய தெய்வத் தமிழ் முறைப்படி நடத்தினார்கள். 
                படம்: அந்தியூரில் குடமுழுக்கை நடத்தும் சிரவை ஆதீனம் அவர்கள்
இப்போது 48 நாட்கள் முடிந்து மண்டல பூஜை நிறைவு விழா நாளை(13.12.2015, ஞாயிற்றுக்கிழமை) காலை நடக்க இருக்கின்றது. இந்த விழாவிற்கு எமது ஞானதேசிகர் சிரவை ஆதீனம், முனைவர்,தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் எழுந்தருள்கின்றார்கள். மஹா சந்நிதானங்களை ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தின் சார்பாகவும், கௌமார பயணத்தின் சார்பாகவும் வரவேற்று வணங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!

என்றும் என் ஞானதேசிகர் சேவையில்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக