திங்கள், 28 டிசம்பர், 2015

இனிய அறிவிப்பு

                       படம்: ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி, ஞானஸ்கந்தாஸ்ரமம்,அந்தியூர்

 நமது கௌமாரபயணம் எனும் இந்த வலைதளமானது தனது இரண்டாம் ஆண்டை நிறைவு செய்து கொண்டு முருகனது திருவருளாலும் நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் குருவருளாலும் வருகின்ற 2016 ஜனவரி மாதம் முதல் முத்தான மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது. கௌமார சமயம் என்பது முருகனைப் பரம்பொருளாகக் கொண்டாடும் சமயமாகும். அந்த வகையில் கௌமாரத்தை நோக்கி ஒரு பயணம் எனும் பொருளில் இந்த வலைதளத்திற்கு கௌமாரபயணம் எனும் பெயர் வைக்கப்பட்டது.  நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் ஆன்மீக பயணத்திலும் அவரிடம் இருக்கின்ற பொக்கிஷமாகிய ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி மூலம் நடந்து வருகின்ற அதிசய சம்பவங்களையும், நமது குரு நாதர் அவர்கள் பெரியதாக மதித்து வரும் சிரவை ஆதீனம் போன்ற உன்னத மகான்கள் மூலம் கிடைக்கின்ற இனிய அனுபவங்கள் ஆகிய அரிய செய்திகளைத் தாங்கி இந்த இரண்டு ஆண்டுகள் செவ்வனே சென்றது. அந்த வகையில் மூன்றாம் ஆண்டில் இன்னும் பல அதிசய செய்திகளும்,முருகப்பெருமானின் விளையாடல்களும், ஜீவ நாடியில் சொல்லி அதன்மூலம் பலன் அடைந்தவர்களின் அனுபவ உண்மைச்சம்பவங்களும், ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் தனது 13 வயது முதல் ஏற்பட்ட ஆன்மீக அனுபங்களும் இனிதே இடம்பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.  நிச்சயம் இது முற்றிலும் மாறுபட்ட ஆன்மீகப் பயணம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. நமது கௌமார பயண வாசகர்கள் வழக்கம்போல் தங்களது வளமான ஆதரவினைத் தந்து தண்டமிழ்க்கடவுளாம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தியின் அருளைப் பெற்று அற்புதமான அதி உன்னதமான ஆனந்த வாழ்வை அடையுமாறு அந்த ஆறு முகனை அன்புடன் அடி பணிகின்றேன்.
ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
அன்புடன்
kaumarapayanam ADMIN

4 கருத்துகள்:

  1. முருகனின் திருவருளால் எல்லோரும்
    எல்லா நலன்களும் பெற்றுய்ய
    அவனையே பிரார்த்திக்கிறேன்.
    "முருகனருள் முன்னிற்க"

    பதிலளிநீக்கு
  2. முருகனின் திருவருளால் எல்லோரும்
    எல்லா நலன்களும் பெற்றுய்ய
    அவனையே பிரார்த்திக்கிறேன்.
    "முருகனருள் முன்னிற்க"

    பதிலளிநீக்கு
  3. முருகனின் திருவருளால் எல்லோரும்
    எல்லா நலன்களும் பெற்று வாழ
    அவன் திருவடியை பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. முருகனின் திருவருளால் எல்லோரும்
    எல்லா நலன்களும் பெற்று வாழ
    அவன் திருவடியை பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு