புதன், 9 டிசம்பர், 2015

நன்றி! நன்றி!! நன்றி!!!

கோவையில் இருக்கும் ஆனைமலை உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த சேலைகள் ஏராளமாக உள்ளது.அவைகளை மழையால் பாதிக்கபட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என மடாதிபதிகள் துறவியர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.அந்தச் செய்தியை நமது கௌமாரப்பயணத்தில் வெளியிட்டுருந்தோம்.

ஒரு மகிழ்ச்சியான செய்தி நமது குரு நாதர் சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்களிடமிருந்து வந்தது. அதில் மடாதிபதிகள் மற்றும் துறவியர்களின் வேண்டுகோளை ஏற்று 10,000 சேலைகள் சென்னைக்கும், 10,000 சேலைகள் கடலூருக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  லாரி மூலம் ஆனைமலை மாசானியம்மன் ஆலயத்தில் இருந்து செல்கின்றது. இது நிச்சயம் பாராட்ட வேண்டிய செயல். கோவில் புடவைகள் என்பதால் அதை உடுத்தும் மக்களும் அருள் பெறுவார்கள். அதே சமயம் அந்த கோவில்களில் உள்ள அம்மன்களும் நம்மை ஆசீர்வதிக்கும். அதற்கு காரணமாக இருந்த சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்களை இந்த கௌமார பயணம் போற்றி வணங்கி மகிழ்கின்றது.




நன்றி:சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள்


என்றும் என் ஞானதேசிகர் பணியில் 
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.


                          ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
                              சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!

2 கருத்துகள்: