சனி, 28 நவம்பர், 2015

2012 ல் சிரவை ஆதீன மாநில முருக பக்தர்கள் பேரவையின் 3-வது மாநில மாநாடு !


வேலூர் அருகேயுள்ள ரத்தினகிரியில் மாநில முருக பக்தர்கள் பேரவையின் 3-வது மாநில மாநாடு 29.12.2012ஆம் தேதி தொடங்கி, இருநாள்கள் சிறப்பாக நடைபெற்றது. ரத்தினகிரி கல்வி அறக்கட்டளையும், சிரவையாதீனம் மாநில முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் இந்த மாநாட்டை கோவை சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள் தொடங்கி வைத்தார். விழாவில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் இரத்தினகிரி பிள்ளைத் தமிழ் என்ற நூலை வெளியிட்டு பேசினார்கள். அதே போல் அடுத்த ஆண்டு மார்கழியில் நான்காவது முருக பக்தர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பும் அதன் அழைப்பிதழும் பின்னர் பதிவிடப்படும்.


    நன்றி: சிரவை ஆதீனம்,தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்


                                         என்றும் குருவின் சேவையில் 
                             ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக