சனி, 13 பிப்ரவரி, 2016

ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி வரலாறு பகுதி-10

                                       
  •   இந்த நேரத்தில் ஸ்ரீமத் ஜெயவீர தேவா அவர்களுக்காக ஒரு குரு வஸ்திரத்தையும் சிறு காணிக்கை ஒன்றையும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் அனுப்பி வைக்க அது திரும்பி வந்தது. காரணம் ஸ்ரீமத் ஜெயவீர தேவா அவர்கள் இறை ஜோதியில் கலந்து விட்டார்கள். அதன் பின்பு ஸ்ரீமத் ஜெயவீர தேவா அவர்கள் புதல்வன் ஸ்ரீமத்முத்துராஜ் தேவா அவர்களிடம் சில காலம் தொடர்பு இருந்தது.
  •   ஸ்ரீமத் ஜெயவீர தேவா அவர்கள் இறை ஜோதியில் கலந்து விட்ட செய்தி ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களை வெகுவாகப் பாதித்தது. நிலையாமையை முற்றிலும் உணர வைத்தது.
  •    அதேபோல் ஆழ் நிலை தியானம் எனும் வித்தையை மட்டும் நூல் வடிவில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் ஸ்ரீமத் ஜெயவீர தேவா அவர்களிடம் பெற வில்லையே என்ற வருத்தம் நீடித்து வந்தது. அதன் காரணமாக ஆவிகள் உலகம், ஆவிகளோடு பேசுதல் பற்றி ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் ஆய்வு செய்யத் தொடங்கினார்கள்.
  •     அப்போது கோவையில் பீளமேட்டில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் தங்கி இருந்தார்கள் என்பதால் கோவையில் உள்ள மீடியம் சுப்பிரமணியம் என்பவரிடம் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் சென்று முறையாக ஆவிகளோடு பேசுகின்ற மீடியம் பயிற்சியை எடுத்தார்கள்.
  •     மீடியமாக தினசரி பயிற்சி செய்து தனது வித்யா குருவாகிய ஸ்ரீமத் ஜெயவீர தேவா அவர்களின் ஆன்மாவிடம் பேசி ஆழ் நிலை தியானம் எனும் பயிற்சியின் நூல் வடிவம் உனக்கு விரைவில் கிடைக்கும் என்ற செய்தியைப் பெற்றார்கள்.
  •    அந்த ஆன்மா அளித்த பதில் போலவே பலித்தது. ஒரு நாள் தனது உறவினர் குமார் என்பவர் குஜராத்தில் இருந்து  ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களைப் பார்க்க வந்தார். அவர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் மேசையில் ஸ்ரீமத் ஜெயவீர தேவா அவர்களின் படம் இருப்பது கண்டு அதை வணங்கி இவர் எப்படி உங்களுக்குத் தெரியும் என ஸ்ரீஸ்கந்த உபாசகரிடம் கேட்க முழுக்கதையும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் சொல்லி முடித்தார்கள்.
  •      முழுவதையும் கேட்ட பின்பு உங்களுக்கு எப்படி இவர் தெரியும் என்று ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் கேட்க இவர் எனக்கு ஆழ் நிலை தியானம் கற்றுக் கொடுத்த ஆசான் என்றும் இவர் படத்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்றும் இந்த படம் போல் எனக்கும் ஒரு படம் வேண்டும் என்றும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களிடம் குமார் கேட்டார்.
  •   ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் அந்த ஆழ் நிலை தியானம் எனும் பயிற்சியின் நூல் வடிவம் உங்களிடம் இருக்கிறதா எனக் கேட்க முழுவதும் உள்ளது வேண்டுமானால் உங்களுக்குத் தருகிறேன் என்று சொல்லி தனது வீட்டில் இருந்து எடுத்து வந்து கொடுக்க மெய் சிலிர்த்துக் கண்ணீர் மல்கி ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டார்கள்.
                                         
  •   அதன் பின்பு மீடியமாக அமர்ந்து ஆன்மாவிடம் கேட்டதும் அது அப்படியே பலித்ததும் ஆவி உலகம் மீது பெரிய நம்பிக்கை ஏற்பட வைத்தது.இது ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களுக்குப் புதிதல்ல. காரணம் தவத்திரு.வேலுச்சாமி அடிகளார் கை விபூதி பட்ட உடனேயே ஆயிரக் கணக்கான ஆவி பீடித சேஷ்டை உடைய பெண்கள் அலறியடித்து ஓடி தன் நோய் நீங்கியதை சிறு வயது முதலாகவே ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் பார்த்து வந்தவர்தான். அது போல் ஸ்ரீஸ்கந்த உபாசகரின் கைவிபூதியால் நலமான ஆவிகள் ஏராளம். தொடரும்...

    ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

2 கருத்துகள்:

  1. The above article said it's clear truth. Because I know 13 years of the shri Skanda murthi upaskar.all these had done for God's blessed.

    பதிலளிநீக்கு
  2. This articles really super because i had first time met with shri Skanda murthi upaskar in coimbatore 13 years back. so i love this article very munch.

    பதிலளிநீக்கு