ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி வரலாறு பகுதி-4

·          

  • தவத்திரு வேலுச்சாமி அடிகளார் எனும் முருக பக்தர் தனது சிறு வயது முதலாகவே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையில் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து முருகனைப் பூஜித்து அருள்வாக்கு சொல்லி வந்தார். அடிகளார் அவர்கள் 45 ஆண்டுகளாக வெள்ளிக்கிழமை இரவில் தூங்காத விரதத்தைத் தவறாமல் கடைபிடித்து வருவதோடு தைப்பூசத்திற்கு காவடி எடுத்துக் கொண்டு சென்னிமலை, சிவன்மலை, பழனி மலை எனும் மூன்று மலைகளில் சென்று வழிபடுவார். பழனியில் சண்முக நதியில் நீராடி காவடியைப் பூசித்து மலைமேல் சென்று வணங்கி வரும் வழக்கத்தைக் கொண்டவராக இருப்பவர் அடிகளார் அவர்கள்.
  • ·         தவத்திரு வேலுச்சாமி அடிகளார் அவர்கள் மூலம் முருகப்பெருமான் நடத்திய அதிசயங்கள் ஏராளம்...ஏராளம்…
  • ·         இப்படி ஒரு அடிகளார் இருப்பதைக் கேள்விப்பட்ட ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் பாட்டி திருமதி.குருவாயம்மாள் அவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தனது கால் வலியுடனே சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் தனது வீட்டில் இருந்து நடந்தே வெள்ளிதோறும் சென்று தவத்திரு வேலுச்சாமி அடிகளார் செய்யும் முருக பூஜையைத் தரிசனம் செய்து வந்தார்.
  • ·         அப்போது ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் அந்தியூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்கள். தனது பள்ளியில் வகுப்பை முடித்துவிட்டு மாலையில் வெள்ளிதோறும் தனது பாட்டி செல்லும் முருகன் கோவிலுக்கு இவரும் சென்று விடுவார்.
  • ·         சிறிய வயது பையனாக இருந்தாலும் தன்னடக்கம் பணிவு ஆகியவை ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களிடம் இருப்பது கண்டு தவத்திரு வேலுச்சாமி அடிகளார் அவர்கள் அருள்வாக்கு சொல்லும் போது அவருக்கு அருகிலேயே  ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களை அமர வைத்து வந்தார்கள்.
                                              
  • ·         தவத்திரு வேலுச்சாமி அடிகளார் அவர்கள் அருள்வாக்கு சொல்வது புரியாத பாடல் வடிவில் வருவது வழக்கம். அதற்கு விளக்கம் புரியாமல் அருள்வாக்கு கேட்பவர்கள் திகைக்கும்போது அதற்குரிய விளக்கங்களை மிகச்சரியாக ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் உரைப்பார். 13 வயது சிறுவன் தனது பாடலுக்குப் பொருள் சொல்வது கண்டு  தவத்திரு வேலுச்சாமி அடிகளார் அவர்கள் மகிழ்ந்து ஆசியிடுவார்கள்.
  • ·         ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தவறாமல் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் தவத்திரு வேலுச்சாமி அடிகளார் அவர்களுக்கு இப்படி சேவை செய்து வந்தார்.
  • ·         மற்ற பக்தர்களுக்கு வாக்கு உரைக்கும் போதே ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களுக்கு விளையாட்டாக சில உபதேசங்களை தவத்திரு வேலுச்சாமி அடிகளார் அவர்கள் உரைத்து வந்தார்கள்.
  • ·         ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களுக்கு தவத்திரு வேலுச்சாமி அடிகளார் அவர்கள் உரைத்த உபதேசங்கள் பசு மரத்து ஆணி போல இளவயதிலேயே பதிந்தது.
  • ·         பண்ணாரி அம்மனைப் பூஜித்து வந்த ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் தவத்திரு வேலுச்சாமி அடிகளார் அவர்கள் மீது ஏற்பட்ட ஈடுபாட்டினால் முருக பக்தராக மாறினார்.
  • ·         முருகனும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் உண்மை பக்தியைக் கண்டு விளையாடல்களை ஆரம்பித்தார்.
  • ·         ஒரு முறை ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் தனது பேனா தொலைந்து போனது. வீட்டில் சொன்னால் திட்டுவார்களோ எனப் பயந்த ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் மிகுந்த மன உளைச்சலில் முருகனைப் பிரார்த்தனை செய்து இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்துவிட்டார்.

                                                                                                                                      தொடரும்...
         ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

2 கருத்துகள்: