வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி வரலாறு பகுதி-14

      
  •   ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவர் ஆரம்பகாலத்தில் பெரிய அளவில் இறை நம்பிக்கை இல்லாமல் இருந்தார். அவரது சொத்து முழுவதும் பறிபோய்விடும் நிலையில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களை வந்து சந்தித்தார். அப்போது இன்னும் மூன்று ஆண்டுகள் பொறுமையாக இருந்தால் நல்ல செல்வ நிலை அடைவாய் என்றும், பூமி பிரச்சினை நீங்கும் என்றும், பூமியை விற்க முடியாது என்றும், மூன்றாண்டு கழித்து படிப்படியாக வாழ்வு வளமடையத் துவங்கும் என்றும் ஸ்ரீஸ்கந்த உபாசகர்கள் அவர்கள் உரைத்து ஆசியிட்டு விபூதி கொடுத்து அனுப்பி வைத்தார்கள். அப்போது இந்த உறவினருக்குப் பெரிய அளவில்  நம்பிக்கை இல்லை என்பதால் பூமியை விற்பதற்கு எவ்வளவோ முயற்சி எடுத்தார். முடியவில்லை. மூன்று ஆண்டுகளும் படாத சிரமங்களை அனுபவித்தார். மூன்று ஆண்டுகள் முடிந்தது மீண்டும் ஸ்ரீஸ்கந்த உபாசகரிடம் வந்தார். அப்போது உனது தோட்டத்திற்கு தண்ணீர் பெறும் யோகம் வந்துவிட்டது உடனே ஒரு குறிப்பிட்ட நாளில் போர் போடு என்று ஸ்ரீஸ்கந்த உபாசகர் உரைத்தார்கள். கையில் பணம் இல்லையே என்றார் உறவினர். ஐம்பது சதவீதம் போதும் என்று பதில் உரைத்தார்கள் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள். அதன் அர்த்தம் அப்போது புரியவில்லை.
  •          ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் உரைத்தது போலவே மூன்று ஆண்டுகள் இருந்தது கண்டு உறவினருக்கு ஓரளவு நம்பிக்கை வரத்துவங்கியது. எனவே ஆழ்துளைக் கிணறு போட வண்டி வந்துவிட்டது. ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களும் நேரிலேயே சென்று அங்கேயே இருந்தார்கள். குறிப்பிட்ட அளவு போர் போட்டும் ஒரு சொட்டு தண்ணீர்கூட வரவில்லை. அனைவரும் சற்று நம்பிக்கையை இழக்கத் தொடங்கினர். ஆனால் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் நம்பிக்கையூட்டி சில நேரம் முயற்சி செய்யச் சொன்னார்கள். ஒரு பெரிய பாறாங்கல்லின்மீது மோதி போர் போடும் துளைக்கும் எந்திரம் உடைந்து விட்டது. அனைவருக்கும் இன்னும் நம்பிக்கை போனது. எவ்வளவு முயன்றும் அந்த துளைக்கும் கருவியை எடுக்க முடியவில்லை.
                                               
  •          ஆனால் நடந்தது அதிசயம். சில நேரத்தில் பெரிய அளவில் நீர் வரத் துவங்கியது. அனைவரும் மகிழந்தனர். நீர் இன்னும் அதிகமானது. சுமார் 10 ஏக்கர் அளவு பாய்ச்சுகின்ற நீரானது வந்தது. ஐம்பது சதவீதம் என்று உரைத்த ஸ்ரீஸ்கந்த உபாசகரின் வாக்கு அப்படியே பலித்தது. அதாவது பாறையில் சிக்கியதால் இருவருக்குமே இழப்பு என்பதால் போர் வண்டியின் உரிமையாளர் பாதி பணம் மட்டுமே பெற்றுக்கொண்டார். அதேபோல் முழுப்பாறையும் ஒழுங்காக உடைந்திருந்தால் முழு அளவு தண்ணீர் வந்திருக்கும். பாதி பாறை உடைந்ததால் பாதியளவான 50% தண்ணீர் மட்டுமே வந்தது. இந்த சம்பவம் ஸ்ரீஸ்கந்த உபாசகரின் 22ம் வயதில் நடந்ததாகும்.
                                             
  •     இந்த சம்பவம் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் வாக்குப் பலித சக்தியையும் ஜீவ நாடியில் உரைக்கும் முருகனின் அதிசயத்தையும் அனைவரையும் உணர வைத்தது.
  •          அதன்பின்பு அந்த உறவினர் ஸ்ரீஸ்கந்த உபாசகருக்கும் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்திக்கும் பக்தராக மாறி இன்று வரை சிறப்பாக பல்வேறு சேவைகளை செய்து வருகின்றார்.

                                                       தொடரும்...


           ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக