சனி, 27 பிப்ரவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-40

                                                       
 சுவாமிமலை திருப்புகழ்
நிறைமதி முகமெனு மொளியாலே
நெறிவிழி கணையெனு நிகராலே
உறவுகொள் மடவர்க ளுறவாமோ
உனதிரு வடியினி யருள்வாயே
மறைபயி லரிதிரு மருகோனே
மருவல ரசுரர்கள் குலகாலா
குறமகள் தனைமண மருள்வோனே
குருமலை மருவிய பெருமாளே!.

குருமலை மீது இருக்கும் முருகப்பெருமானே, குறமகள் வள்ளியை மணம் செய்தவரே, மறைகள் தேடி பயில்கின்ற ஹரியின் மருமகனே, அசுரர்களுக்கு காலனாக வந்தவரே,சந்திரன் போன்ற முகத்தையும், கணைகள் போன்ற விழிகளுமுடைய மகளிரோடு சேராமல் உன்னுடைய திருவடியை இனி அருள்வாயே என்று அருணகிரிநாத சுவாமிகள் பாடிய திருப்புகழே இன்றைய பாராயண திருப்புகழாகும். குரு மலை என்பது சுவாமிமலையைக் குறிக்கும்.
                        
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்,
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக